Breaking News

2016 ஆங்கிலப் புத்தாண்டுப் இராசி பலன்கள் -மீன இராசி

இந்த வருடம் தொடக்கத்தில், குருபகவான் உங்கள்
ராசிக்கு 6ம் இடத்தில் சஞ்சரிக்கிறார். குருவின் இந்த 6-ம் இடத்து சஞ்சாரம் வருகிற 2016 ஆகஸ்டு மாதத்துடன் முடிவடைந்து, அதன்பிறகு 7- ம் இடத்துக்குப் போகிறார். சனி பகவான் 9-மிடத்திலும், ராகு பகவான் 6-ம் இடத்திலும், கேது 12-மிடத்திலும் சஞ்சாரம் செய்கிறார்கள். இனி ஒவ்வொரு கிரக சஞ்சாரமும் உங்கள் ராசிக்கு எப்படி இருக்கும் என்பதைப் பார்க்கலாம்.

ஆண்டின் தொடக்கத்தில், 6-ம் இடத்தில் சஞ்சரிக்கும் குருபகவான் அவ்வளவு நல்ல பலன்களைத் தரமாட்டார். வண்டி வாகனங்களாலும், கால் நடைகளாலும் கஷ்டத்தை ஏற்படுத்துவார். உங்கள் உடல்நலம் பாதிக்கப்படும். நீங்கள் கட்டிக் கொண்டிருக்கும் கட்டடம் பண முடையினாலோ அல்லது எதிரிகளின் தொல்லையாலோ பாதியில் நின்றுவிடும். சிலர் தாங்கள் குடியிருக்கும் வீட்டை விற்றுவிட்டு வேறு வீட்டுக்கு குடியேறுவார்கள். சிலர் சொந்த வீட்டை விற்றுவிட்டு வாடகை வீட்டில் குடியேறுவார்கள். தொழில், வியாபாரம் சம்பந்தமாக அடிக்கடி வெளியூர் செல்லநேரும். அடிக்கடி மேற்கொள்ளும் பயணங்களால், உடல்நலக் குறைவு ஏற்படும். சிலருக்கு ஓரிடத்தில் அமர்ந்து செய்யக்கூடிய பணியாக இல்லாமல் ஊர் ஊராக சென்று செய்யக்கூடிய பணியாக அமையும்.

குடும்பத்தாரின் தேவைகளைக் காலம் அறிந்து நிறைவேற்ற முடியாமல் போகும். அதனால், குடும்பத்தில் குழப்பங்களும் ஒற்றுமைக் குறைவும் ஏற்படலாம். அதன் பயனாக உங்கள் மீது மனக் கசப்பும் வெறுப்பும் ஏற்படும். குடியிருக்கும் வீட்டை சுத்தமாகவும் கவனமாகவும் பார்த்துக்கொள்வது நல்லது. விஷ ஜந்துகள் குடியேறி யாருக்காவது விஷக்கடி ஏற்படக்கூடும். மாணவர்களுக்கு கல்வியில் நாட்டம் குறையும். சில மாணவர்கள் கல்வியின் காரணமாகவோ அல்லது வேறு வேலை விஷயமாகவோ வெளியூர் சென்று தங்கவேண்டிய சூழ்நிலை ஏற்படும். வீட்டில் உள்ள வடயதானவ்ர்களுக்கு உடல் நல்ம் பாதிப்படையும் . அதனால், மருத்துவச் செலவு ஏற்படும். அவசியத் தேவைகளை விட்டுவிட்டு கேளிக்கை, பொழுதுபோக்குகளில் பணத்தைச் செலவழிப்பீர்கள். அதனால், அத்தியாவசியச் செலவுகளுக்குபணம் இல்லாமல் போய் குடும்பத்தில் பிரச்சினை ஏற்படும். பின்னர் கட்டாயத் தேவைகள் உருவாகிவிடுவதால், அத்ற்கு செலவழிக்க பணமில்லாமல் திண்டாடுவர். 












பணத்துக்காக அல்லாடும் சூழலை நீங்களே உருவாக்கிக்கொள்வீர்கள். கடன் வாங்க வேண்டியிருக்கும். கொடுக்கல்-வாங்கலில் சிக்கல் உருவாகும். சொந்தத் தொழில் செய்பவர்கள் எச்சரிக்கையோடு முக்கிய முடிவுகளை எடுக்காவிட்டால் திண்டாட நேரும். எனவே எந்த மாற்றத்தையும் கொண்டுவர விரும்பி ரிஸ்க் எடுக்கவேண்டாம். அலுவலகத்தில் வேலை பார்ப்பவர்களுக்கு வேலைப்பளு அதிகமாகும். அதன் காரணத்தால் மேலதிகாரிகளிடமும் சக தொழிலாளர்களிடமும் சுமுக நிலை மாறி நிம்மதியற்ற சூழ்நிலை காணப்படும். சிலர் அலுவலகப் பிரச்சினை காரணமாக வேண்டாத இடத்துக்கு பணிமாற்றம் செய்யப்படுவார்கள். சிலர் அவர்கள் தகுதிக்கு குறைந்த வேலை அமையாமல் தகுதிக்கு குறைந்த வேலையில் அமர்த்தப்படுவர்.

தந்தைக்கு உடல்நல பாதிப்புகளும் கண்டங்களும் ஏற்படக்கூடும். சகோதரனுக்கும் கண்டங்கள் ஏற்படும். அதுபோல உங்களுக்குமே கண்டங்கள் ஏற்படும். எனவே ஆயுஷ் ஹோமம் அல்லது மிருத்யஞ்ச்ய ஹோமம் இவற்றை செய்வதன் மூலம் ஆயுளுக்கு ஏற்படும் கண்டங்களைத் தடுத்துக்கொள்ளலாம். இப்படி ஹோமம் செய்துகொண்டாலும் கூட தாய் அல்லது தந்தை வழியில் யாருக்காவது காரியம் செய்யவேண்டிவரும். உங்கள் வாழ்க்கைத் துணைவருக்கும் கண்டங்கள் ஏற்பட வழியுண்டு என்பதால், மேற்கணட ஹோமங்களை செய்துகொண்டால் , தடுப்பு ஊசி போட்டுக்கொண்டதுபோல ஆகும். புத்திர –புத்திரிகளுக்கும், மனைவிக்கும் கூட தோஷம் ஏற்படும். எனவே ஹோமம் செய்துகொளவ்து அவசியம். இந்த காலக் கட்டத்தில் பேச்சில் நிதானம் தேவை.

இதுவரை உங்களை பாடாய்படுத்திய ராகு பகவான் இப்போது உங்கள் ராசிக்கு ஆறாமிடத்தில் ஆற்றலுடன் வந்தமர்கிறார். வீட்டில் உங்களை எதிரியைப்போல் பார்த்த குடும்பத்தினர் இனி பாசத்துடன் நடந்து கொள்வார்கள். தள்ளிப் போன அரசாங்க விஷயங்கள் விரைந்து முடிவடையும். ராஜதந்திரமாக சில முடிவுகள் எடுப்பீர்கள். பிரச்னைகள் வெகுவாகக் குறையும். வெற்றி பெற்ற மனிதர்களின் நட்பு கிடைக்கும். மகளுக்கு நல்ல வரன் அமையும். மகனுக்கு அயல்நாட்டுத் தொடர்புடைய நிறுவனத்தில் வேலை கிடைக்கும். 

கண்டும், காணாமல் சென்று கொண்டிருந்தவர்கள் வலிய வந்து நட்பு பாராட்டுவார்கள். கூடாப்பழக்க வழக்கங்களிலிருந்து மீள்வீர்கள். வெளியூர் பயணங்களால் புத்துணர்ச்சி பெறுவீர்கள். திருமணம், சீமந்தம், கிரகப் பிரவேசம் போன்ற சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். விருந்தினர்களின் வருகை உண்டு. என்றாலும் முக் எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். உங்கள் ரசனைக்கேற்ப வீடு, வாகனம் அமையும். தள்ளிப்போன விஷயங்கள் முடியும். கல்யாண முயற்சிகள் பலிதமாகும். தாயாரின் உடல் நிலை சீராகும். தாய்வழி உறவினர்களின் ஆதரவு பெருகும். 

பிள்ளைகளால் மதிப்பு கூடும். விலகிச் சென்ற சொந்த-பந்தங்கள் வலிய வந்து பேசுவார்கள். அரசியலில் செல்வாக்கு கூடும். வெளிநாடு செல்ல விசா கிடைக்கும். குடும் பத்தினருடன் சென்று குலதெய்வப் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். மாணவர்கள் திறமை களையும், அறிவாற்றலையும் வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வரும். உயர்கல்வியில் விரும்பிய பாடப்பிரிவில் சேருவீர்கள். மதிப்பு கூடும். தள்ளிப்போன திருமணம் கூடி வரும். நல்லவர்களின் நட்பு கிடைக்கும். பெற்றோரின் அரவணைப்பு உண்டு. அரசியல்வாதிகள் கோஷ்டிப் பூசலிலிருந்து விடுபடுவீர்கள். 

சகாக்கள் மத்தியில் மதிக்கப்படுவீர்கள். தலைமைக்கு நெருக்கமாவீர்கள். கலைத் துறையினர் வேற்றுமொழி வாய்ப்பு களால் புகழடைவீர்கள். மூத்த கலைஞர்களால் ஆதாயமடைவீர்கள். வியாபாரிகள் இழப்புகளை சரி செய்வீர்கள். மாறுபட்ட அணுகுமுறையால் லாபம் ஈட்டுவீர்கள். தள்ளிப்போன ஒப்பந்தம் கையெழுத்தாகும். அனுபவமிக்க வேலையாட்களை பணியில் அமர்த்துவீர்கள். நண்பர்களின் உதவியால் வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள். கட்டிட உதிரி பாகங்கள், ரியல் எஸ்டேட், ஸ்பெகுலேஷன், ஏற்றுமதி-இறக்குமதி வகை -ஆவணங்களில் கையெழுத்திடும் முன்பாக சட்ட நிபுணர்களை கலந்தாலோசிப்பது நல்லத

கேது ராசிக்கு 12ம் வீட்டில் அமர்வதால் மனப்போராட்டங்கள் ஓயும். வாழ்க்கையின் நெளிவு, சுளிவுகளை கற்றுக் கொள்வீர்கள். நோய்கள் குணமாகும். ஆரோக்யம் சீராகும். குடும்பத்தில் அமைதி உண்டாகும். சிக்கனமாக இருக்கலாம் என்று நீங்கள் எப்போது திட்டமிட்டாலும் முடியாமல் போகும். சில நாட்கள் தூக்கம் குறையும். திருமணம், சீமந்தம், கிரகப் பிரவேசம் போன்ற சுபச் செலவுகளும் வந்துபோகும். வேற்று மதத்தவர்கள், மொழியினர்கள், அண்டை மாநிலத்தவர்களால் ஆதாயமடைவீர்கள். வெளிநாட்டிலிருக்கும் நண்பர்களால் திடீர் திருப்பம் உண்டாகும். 

கோயில் கும்பாபிஷேகத்தை முன்னின்று நடத்துவீர்கள். முதல் மரியாதையும் கிடைக்கும். வெளிவட்டாரத்தில் இழந்த செல்வாக்கை மீண்டும் பெறுவீர்கள். பால்ய நண்பர்களை சந்தித்து மனம் விட்டுப் பேசி மகிழ்வீர்கள். பிள்ளைகள் நீண்ட நாட்களாக கேட்டுக் கொண்டிருந்ததை வாங்கித் தந்து உற்சாகப்படுத்துவீர்கள். அக்கம்-பக்கம் வீட்டாருடன் இணக்கமான சூழ்நிலை உருவாகும். புது பதவிக்கு உங்களது பெயர் பரிந்துரை செய்யப்படும். வி.ஐ.பிகளின் நட்பால் சில விஷயங்களை சாதித்துக் காட்டுவீர்கள். எல்லாவற்றையும் சமாளிக்கும் மனோபலம் கிடைக்கும். இளைய சகோதர வகையில் மகிழ்ச்சி உண்டாகும். பாகப்பிரிவினை சம்பந்தப்பட்ட பிரச்னைக்கு சுமுகத் தீர்வு காண்பது நல்லது. வீண் சண்டை, விவாதங்களிலிருந்து ஒதுங்குவீர்கள். என்றாலும் மறைமுக எதிர்ப்புகள், தோல்வி மனப்பான்மை, வீண் பழி, முன்கோபம் வந்து செல்லும்.

வேலைச்சுமை, குடும்பத்தில் சச்சரவு, பிறர் மீது நம்பிக்கையின்மை, பணப் பற்றாக்குறை வந்து செல்லும். அநாவசியமாக யாருக்காகவும் உறுதிமொழி தர வேண்டாம். வழக்கில் வழக்கறிஞரை மாற்ற வேண்டிய சூழ்நிலை உருவாகும். மறதியால் விலை உயர்ந்த பொருட்களை இழக்க நேரிடும்நேர்மறை எண்ணங்கள் பிறக்கும். வருமானத்தை உயர்த்த புது முயற்சிகளை மேற்கொள்வீர்கள். தந்தையாரின் ஆரோக்யம் சீராகும். அவருடனான மோதல்கள் விலகும். 

பிதுர்வழிச் சொத்து கைக்கு வரும். சித்தர் பீடங்கள், புண்ணிய தலங்களுக்குச் சென்று வருவீர்கள். யோகா, தியானத்தில் மனம் லயிக்கும். வியாபாரத்தில் நம்பிக்கைக்குரியவரை கலந்தாலோசித்து சில முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். இங்கிதமாகப் பேசி வாடிக்கையாளர்களை கவருவீர்கள். சிலர் புதுத் தொழில் தொடங்குவீர்கள். அரசாங்கத்தால் இருந்த நெருக்கடிகள் நீங்கும். உத்யோகத்தில் எல்லோரும் மதிப்பார்கள். என்றாலும் கூடுதல் நேரம் ஒதுக்கி பணிபுரிய வேண்டிய நிலை ஏற்படும். சக ஊழியர்களுக்காக வாதாடி சாதித்துக் காட்டுவீர்கள். கேட்ட இடத்திற்கே மாற்றம் கிடைக்கும். அழகு,ஆரோக்யத்தையும், பணம், பதவியையும் தரும்.

குருபகவான் 2016 ஆகஸ்டு மாதம் முதல், உங்கள் ராசிக்கு 7-மிடத்துக்குப் போவதால், வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்கள் பெருகுவார்கள். செய்து வரும் வியாபாரத்துடன் வேறு ஒரு வியாபாரத்தையுயும் இணைத்து மிகப் பெரிய லாபம் , வருமானம் ஈட்டும் நிலை உருவாகும். உத்தியோகத்தில் வரவேண்டிய பதவி உயர்வு, சம்பள உயர்வு, , இடமாறுதல், வழக்கில் வெற்றி என்ற நிலை வந்து சேரும். தொழிலை விரிவுபடுத்துவதற்காக புதிய எந்திரங்கள் வாங்குவீர்கள். ஊழியர்கள் எண்ணிக்கையை அதிகரித்து தொழிலை விருத்தி செய்வீர்கள் . கடந்த சில ஆண்டுகளாக இருந்துவந்த கடன்தொல்லைகள் அவமானங்களிலிருந்தும் விடுபடுவீர்கள். 

கிரக நிலைகள் அனைத்தும் உங்களை உயர்த்தும் நிலையில்தான் அமைகிறது. நீங்கள் செய்யவேண்டியது வீண்பேச்சைக் குறைப்பது மட்டுமே. பிள்ளைகள் திருமணம் , படிப்பு, தொழில் என்று அனைத்தையும் வெற்றிகரமாக நிறைவேற்றி நிம்மதி காண்பீர்கள். புதிய வீடு, வாகனம் , மனை அமையும். சிலருக்கு ஏற்கெனவே இருந்துவரும் குடும்பப் பிரச்சினை, கணவன்-மனைவி கருத்துவேற்றுமைப் பிரச்சினைகள் தீரும். சிலருக்கு வெளிநாடு செல்லும் யோகம் கிடைக்கும். நீண்ட நாள் இருந்துவந்த கடன் பிரச்சினையை தீர்த்து நிம்மதி அடைவீர்கள். கோர்ட் பிரச்சினகள் ஒரு முடிவுக்கு வரும். எதிராக இருந்துவந்த ஊழியர்கள் அனுசரணையாவார்கள். 

வியாபாரம் பெருகும். முதலீடு குறைவால், வியாபாரம் படுத்துப் போனவர்களுக்கு திடீர் என அறிமுகமாகும் பெரிய மனிதர்களால் படுத்துப்போன வியாபாரமும் எழுந்து நின்று விடும். சிலர் வியாபாரம் சம்பந்தமாக வெளியூர் செல்வர். எந்த வேலையும் தெரியாத படிப்பறிவற்றோருக்குக்கூட ஜீவனத்துக்கு ஏதாவதொரு வேலை கிடைத்து பிழைப்பைப் பார்த்துக்கொள்ள முடியும். குடும்பத்தில் சுபமங்கள நிகழ்ச்சி நடக்கும். வெளிநாடு சென்று படிக்க யோகம் கிடைக்கும். டாக்டர், சாஃப்ட்வேர் எஞ்சினியர், வெல்டர் என்று வேலையில் சேர ஆசைப்பட்டவர்களுக்கு இப்போது நேரம் கூடி வரும். 

அடிக்கடி மருத்துவ செலவு செய்துகொண்டிருப்பவர்கள், பூரண நிவாரணம் பெறுவர். கணவன்-மனிவி பிரச்சினை தீரும். மனைவியின் நகையை அடகுவைத்துவிட்டு விழித்துக்கொண்டிருந்தவர்கள இப்போது பொருளாதார முன்னேற்றமடைந்து மீட்டுக் கொடுப்பது மட்டுமல்லாமல் அதனால் ஏற்பட்ட பிணக்கும் தீரும். இதுவரை தள்ளிப்போன திருமணங்கள் இப்போது நல்லபடியாக முடிவடையும்.

முயற்சிகள் வெற்றியடையும். மனக் குழப்பங்கள் தீரும். இல்லறம் சிறப்படையும். தொழில் சிறக்கும். கல்வி மேம்படும். .இப்போது வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்கள் பெருகுவார்கள். செய்து வரும் வியாபாரத்துடன் வேறு ஒரு வியாபாரத்தையுயும் இணைத்து மிகப் பெரிய லாபம் , வருமானம் ஈட்டும் நிலை உருவாகும். உத்தியோகத்தில் வரவேண்டிய பதவி உயர்வு, சம்பள உயர்வு, , இடமாறுதல், வழக்கில் வெற்றி என்ற நிலை வந்து சேரும். தொழிலை விரிவுபடுத்துவதற்காக புதிய எந்திரங்கள் வாங்குவீர்கள். 

ஊழியர்கள் எண்ணிக்கையை அதிகரித்து தொழிலை விருத்தி செய்வீர்கள் . கடந்த சில ஆண்டுகளாக இருந்துவந்த கடன்தொல்லைகள் அவமானங்களிலிருந்தும் விடுபடுவீர்கள். கிரக நிலைகள் அனைத்தும் உங்களை உயர்த்தும் நிலையில்தான் அமைகிறது. நீங்கள் செய்யவேண்டியது வீண்பேச்சைக் குறைப்பது மட்டுமே. பிள்ளைகள் திருமணம் , படிப்பு, தொழில் என்று து நல்லபடியாக முடிவடையும். பணப் பிரச்சினையும் பொருளாதார சிக்கல்களும் தீரும். இதுவரை உங்கள் முன்னேற்றத்துக்கத் தடையாக இருந்தவர்கள்கூட மனம் மாறி உங்களுக்கு உதவிசெய்வாடர்கள். மற்றவர்கள் முன்னிலையில் கம்பீரமாக வலம் வருவீர்கள். இளைய சகோதரர் வழியே ஒத்துழைப்பு கிடைக்கும். வேலை தேடுபவர்களுக்கு வேலை கிடைக்கும். படிப்பில் மந்தமாக இருந்த பிள்ளைகள் படிப்பில் சிறந்த முன்னேற்றம் காண்பார்கள். விட்டுப் பிரிந்த உறவுகள் மீண்டும் கூடி வருவார்கள்.

பணப் பிரச்சினையும் பொருளாதார சிக்கல்களும் தீரும். தந்தை வழியில் இருந்து வந்த பிரச்சினைகள் அகன்று பிரச்சினைகள் தீரும். உங்களுடைய முயற்சிகளுக்கு தந்தையின் முழு ஒத்துழைப்பு கிடைக்கும். ஆன்மீகத்தில் மனம் ஈடுபடும். இதுவரை தடைபட்ட திரும்ணங்கள் நடந்தேறும். நீங்கள் சார்ந்திருக்கும் துறையில் புகழடைவீர்கள். சிலர் சொந்தத் தொழிலை மேற்கொள்வர். இதுவரை உங்கள் முன்னேற்றத்துக்கத் தடையாக இருந்தவர்கள்கூட மனம் மாறி உங்களுக்கு உதவிசெய்வாடர்கள். மற்றவர்கள் முன்னிலையில் கம்பீரமாக வலம் வருவீர்கள். இளைய சகோதரர் வழியே ஒத்துழைப்பு கிடைக்கும். வேலை தேடுபவர்களுக்கு வேலை கிடைக்கும். படிப்பில் மந்தமாக இருந்த பிள்ளைகள் படிப்பில் சிறந்த முன்னேற்றம் காண்பார்கள். விட்டுப் பிரிந்த உறவுகள் மீண்டும் கூடி வருவார்கள்.

சனியின் 9-ம் இடத்து சஞ்சாரம் நன்றாக இருக்கும் என்று ஏற்கெனவே கூறியிருந்தோம். இந்தவருடம் சாதகமான சனிப் பெயர்ச்சியினால், வேலை கிடைக்காதவர்களுக்கு வேலை கிடைக்கும். மாலை கிடைக்காத்வர்களுக்கு மாலை கிடைக்கும். மழலை கிடைக்காதவர்களுக்கும் மழலை கிடைக்கும். சகோதரர்கள் அடிக்கடி உங்களுக்கு பிரச்சினை கொடுத்தாலும், முடிவில் உங்கள் கருத்துக்கு ஒத்துவருவார்கள். தொழில்ரீதியாக உடன்பிறப்புடன் சேர்ந்து செய்து வந்த கூட்டு வியாபாரம் இப்போது உங்கள் உடன்பிறப்பு உங்களை விட்டுப் பிரிவதால் பின்னடைவை சந்திக்க விடாமல் தக்க ஒருவரின் துணையோடு எடுத்து நடத்தி செயல்படக்கூடிய நிலை உருவாகும். எதிரிகள் சரணடைவர். 

இல்லம் தேடி நல்ல செய்தி வரும். உத்தியோக மாற்றம், இலாகா மாற்றம் என்று எதிர்பார்த்தவர்களுக்கு குறிப்பிட்டபடி வந்து சேரும். வங்கிக் கடன் பெற்று சுய தொழில் செய்வீர்கள். பொருளாதாரப் பிரச்சினை அகலும். பொருள் வளர்ச்சி கூடும். மாற்று மருத்துவம் உடல்நலத்தைச் சீராக்கும். அரசுவழிச் சலுகைகள் எதிர்பார்த்தபடி கிடைக்கும். சொந்தத் தொழிலில் முன்னேற்றம், உத்தியோகத்தில் உயர்வுகள், வியாபாரத்தில் நல்ல பணவரவு ,தொழிலுக்காக வெளியூர்- வெளிநாடு செல்லுதல் என்று நல்ல பலன்கள் கூடிவரும். படித்து முடித்துவிட்டு வேலை தேடி வருபவர்களுக்கு ந்ல்ல சம்பளத்தில் வேலை கிடைக்கும். 

பிரச்சினையால் பிரிந்து வாழும் தமப்தியரை அவர்களது குடும்பத்திலுள்ள பெரியவர்கள் சேர்த்து வைப்பார்கள். மகன்-மகள் திருமணம் சிறப்பாக நடைபெறும் யோகம் வந்துவிட்டது. பூர்வீகச் சொத்து குடும்ப உறவுகள் போன்ற பிரச்சினைகளில் இருந்துவந்த வழக்குகளில் தீர்ப்பு சாதகமாக வந்து கோர்ட் கேஸ்கள் ஒரு முடிவுக்கு வரும். மூட்டு வலி , மூச்சிறைப்பு ,சர்க்கரை நோய் , நெஞ்சுவலி , ரத்த அழுத்தம் சம்பந்தமான நோய்களிலிருந்து மீண்டு ஆரோக்கியம் பெறுவீர்கள். 

விவசாயம் செய்பவர்கள் பெருத்த லாபத்தை ஈட்டுவார்கள். எந்தத் தொழில் செய்தாலும் அதில் சிறந்த விருத்தி வந்து சேரும்.ஆரோக்கியம் பெறுவார்கள். மிகப் பெரிய நல்ல மாற்றங்கள், அதிர்ஷ்ட திருப்பங்கள் மீண்டிம் தலையெடுக்கப்போகிறது. விட்ட கோட்டையை மீண்டும் பிடித்தே தீருவீர்கள். தோல்விமேல் தோல்வி ஏற்பட்டு மிகுந்த கவலையில் இருந்த நீங்கள் இப்போது வெற்றிமேல் வெற்றியைக் குவிக்கப் போகிறீர்கள். கவலை ஏற்படுத்திய கடன்கள் இருந்த இடம் தெரியாமல் ஓடிவிடும். 

சொத்துக்கள் குவியும். இப்படிப்பட்ட நல்ல நேரத்தை உபயோகித்துக்கொள்வீர்கள். நீங்கள் வாக்குறுதிகளைக் காப்பாற்றுவீர்கள். வராமல் நின்றுபோன பணம் தற்போது வந்து சேரும். கணவன்-மனைவிக்கிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு மறையும். தொழிலில் இருந்துவரும் பிரச்சினை அகலும். உத்தியோகத்தில் இருந்துவரும் மறைமுக எதிர்ப்புகள் நீங்கும். வெளியூர், வெளிநாடு பயணத்தால் நன்மை கிடைக்கும். இப்படியாக சனிபகவானின் 9-ம் இடத்து சஞ்சாரம் நன்மைகளைக் கொடுக்கும். குருவின் சஞ்சாரம் சரியில்லாவிட்டாலும், சனி குரு பார்வை பெறுவதால் நல்ல பலன்களையே கொடுப்பார்

பரிகாரம்:

உங்களுடைய ராசிக்கு கேதுவின் சஞ்சாரம் கொன்சம் படுத்தும் என்பதால், கணேச பகவானின் கோவிலுக்கு சென்று கோவிலை சுத்தம் செய்வதுபோன்ற சேவைகளை செய்யவும். கொள்ளு தானம் செய்யவும். குரு பகவான் ஆண்டின் முற்பகுதியில், சரியான ஸ்ஞ்சாரம் செய்யாததால், வியாழக் கிழமைகளில் தட்சிணாமூர்த்தியை கொண்டக்கடலையும் மஞ்சள் மலர்களையும் சாத்தி வழிபடவும். சனிக் கிழமைகளில், சனீஸ்வரனின் ஆஅல்யம் சென்று, எள்தீபம் ஏற்றி வழிபடவும்.

இந்த 2015-ம் ஆண்டு உங்களுக்கு யோகமாக வாழ்த்துக்கள்!.

அனைத்து இராசிகளுக்கும்.
மேஷம்ரிஷபம்மிதுனம்கடகம்
சிம்மம்கன்னிதுலாம்விருச்சிகம்
தனுசுமகரம்கும்பம்மீனம்