யாழில் விஷேட பொலிஸ் பிரிவு
யாழ்ப்பாணம் நகரில் இடம்பெறுகின்ற குற்றச்செயல்களை கட்டுப்படுத்துவதற்காக விஷேட பொலிஸ் பிரிவொன்று ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.
களவு, கொள்ளை மற்றும் தாக்குதல் சம்பவங்கள் போன்ற குற்றச்செயல்களை கட்டுப்படுத்துவதற்காக இந்த விஷேட பொலிஸ் பிரிவு உருவாக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்தனர்.
அந்த பொலிஸ் பிரிவு எந்தவித சம்பவங்களையும் எதிர்கொள்ளும் விதமாக பயிற்சியளிக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்தனர்.
அண்மைய நாட்களில் யாழ் நகரில் இடம்பெற்ற பல்வேறு தாக்குதல் சம்பவங்களுடன் தொடர்புடைய நபர்களை கைது செய்வதற்கான நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளன.