Breaking News

புலிகளை விசாரிக்கசொல்ல சுமந்திரனுக்கு அருகதை இல்லை-சிறிதரன் அதிரடி(காணொளி)


பாராளுமன்ற உறுப்பினர் ஆபிரகாம் சுமந்திரன் அடிக்கடி புலிகளை விசாரிக்கசொல்லுவதும் புலிகள் இனச்சுத்திகரிப்பு செய்தார்கள் எனச்சொல்லுவதும் ஏற்றுக்கொள்ளக்கூடியதல்ல என பாராளுமன்ற உறுப்பினரும் யாழ்மாவட்டத்தில் அதிகூடிய விருப்பு வாக்கினை பெற்றவருமான சிவஞானம் சிறிதரன் தெரிவித்துள்ளார்.

ஆவுஸ்ரேலியாவிலிருந்து ஒலிபரப்பாகும் தாயகம் வானொலிக்கு நேற்று வழங்கிய பேட்டியிலேயே தமிழரசு கட்சிக்குள் நடைபெறும் சுத்துமாத்து அரசியலை ஓரளவிற்கு துணிவோடு அம்பலப்படுத்தியிருக்கிறார் சிறிதரன் அவர்கள்.

அண்மையில் சம்பந்தன் ஜெனிவாக்கு எழுதிய கடிதத்தில் புலிகளை விசாரிக்குமாறு கோரியிருந்ததாகவும் அதில் தனக்கு உடன்பாடில்லை என்றும் அவர்கள் ஓரிருவர் எடுக்கும் முடிவுகளை தொடர்ந்தும் ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் உள்ளுக்குள் கதைத்து முடிவெடுங்கள் என பத்தி எழுதும் பத்திரிகையாளர்களும் க(வ)ம்பவாரதிகளையும் அவர் கடிந்துகொண்டதோடு இவ்வாறு தொடர்ந்து செயற்பட்டால் ஜெனிவாக்கு பல கடிதங்கள் செல்வதை தவிர்க்க முடியாது எனவும் தெரிவித்துள்ளார்.


காணொளி-தாயகம் தமிழ் வானொலி


தொடர்புடைய முன்னைய செய்திகள்




வெளிவிவகார அமைச்சருடன் பிணையெடுக்க சென்ற சிறிதரன் ?(ஆதாரங்கள்)





ஆலோல்ட்டை அமைச்சராக்க முடியாது -முதலமைச்சர் அதிரடி


சிறிதரனால் பொலீசில் காட்டிக்கொடுக்கப்பட்டவர்கள்(விபரம் உள்ளே)


விக்கியை இப்படியே விட்டால் நிலமை மோசமாகும்-சுமந்திரன்(காணொளி)

கல்வி அமைச்சராக ஆனல்ட் :சுமந்திரன் முடிவு-இணங்குவாரா விக்கி

மைத்திரி வீட்டில் நத்தார் கொண்டாடிய வடமாகாணசபை உறுப்பினர் யார்?

என்னால் உத்தரவாதம் தரமுடியாது-சம்பந்தன் விடாப்பிடி(கடிதம் உள்ளே)

முதலமைச்சரை பதவி நீக்க முற்பட்டால் மாகாண சபை முடக்கப்படும்

முதல்ரிவரின் “வலக்கையை உடைக்க வேண்டும்” சுமந்திரன் போட்ட சதித்திட்டம் அம்பலம்!!

முதலமைச்சரை கருணாவுடன் ஒப்பிடும் சிறிதரன்

இனவழிப்பு நடைபெற்றதற்கான ஆதாரம் இல்லை-சுமந்திரன்(காணொளி)

இலங்கைக்கு எதிராக எந்த தீர்மானமும் வேண்டாம்-சுமந்திரன்(காணொளி)